saykumar

Saturday, March 20, 2010

என் காதலி .......!!!!!

புத்தகங்களைத்தான் நான் எப்போதும் என் காதலி என்றுசொல்வதுண்டு. நான் உலகத்தையே மறந்து இன்ப கடலில் திளைப்பது எ. ஆர். ரகுமானின் இசையில்தான். ஆனால் அதையும் மறப்பது என் காதலியால்தான்.ஏனென்றால் நான் வாழாத வாழ்க்கை எல்லாம் இங்கு வாழ்கிறேன். நான் காணாத உலகை எல்லாம் இங்கு பார்கிறேன்.நான் உணராத உணர்வை எல்லாம் இங்கு உணர்கிறேன். என் காதலியை பெத்தவனை என்னனு சொல்லுவது அவன் பெயர் கல்கி. சொல்லும் போதே வாயில் கற்கண்டு கரையும் உணர்வு. என் காதலியை என் கண்னுக்கு காட்டியவர் என்னை படைத்த தெய்வம் என் அப்பாதான்.அவர்தான் என்னை லைப்ரரியில சேர்தாரு.நான் தொடக்கத்தில் சாதாரணமாக எல்லோரையும் போலதான் பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லாகதைகள், பரமார்த்தகுரு கதைகள், ஈசாப் கதைகள் என்று சிறுவர்களின் கதைகளாகவே தேடித் தேடி படித்து வந்தேன்.
பிறகு சிறிது மாதங்களுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களாய் இருந்தனவெல்லாம் வீர சாகச கதைகள், துப்பறியும் நாவல்கள், போன்றவையே. எ. சோதி அவர்களின் ஹெர்குலிஸ் சோதனைகள்,ஜேசனின் தங்க கம்பள பயணம், மாவீரன் தீசியசும் மெடுசா அரக்கியும் போன்றவையும் விபரீத விளையாட்டு, , ராஜேஷ்குமாரின் நாவல்கள் மட்டுமே. இது போன்ற சமயங்களில்தான் கல்கியின் ''மோகினித் தீவு'' என் அந்த பட்டது.